• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை – கரூர் தேசிய புற வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மனு

June 25, 2018 தண்டோரா குழு

கோவை- கரூர் இடையே அமைக்க இருக்கும் தேசிய புற வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை- கரூர் இடையே தேசிய கிழக்கு புறவழிச்சாலை அமைக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.இத்திட்டத்தினால் ஏரளாமன விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி, கோவை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

அப்போது பேசிய அச்சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி,

“இத்திட்டத்தினால் ஏராளமான விவசாய நிலங்கள் பாதிப்பதாகவும்,குறிப்பாக இதுவரை விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் கூட நடத்தவில்லை என குற்றம்சாட்டிய அவர், போக்குவரத்து வசதிக்காக விரைவாக செல்ல ஏதுவாக இருக்க வேண்டும் என்பதற்காக இது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.அதைக் தாங்கள் வரவேற்பதாக தெரிவித்த அவர்கள்,இது போன்ற திட்டங்களைக் செயல்படுத்தும் போது விவசாய நிலங்களைக் பாதிக்காத வண்ணம் செயல்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்”.

மேலும் படிக்க