• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை இயக்குவது யார்? வாகை சந்திரசேகர் கேள்வி

June 25, 2018 தண்டோரா குழு

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை இயக்குவது யார் என பேரவையில் திமுக எம்.எல்.ஏ.வாகை சந்திரசேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

10 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று மீண்டும் தொடங்கியது.முன்னாள் எம்.எல்.ஏ வேதாசலம் மறைவுக்கு பேரவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.அப்போது பேரவை துவங்கியதும் திமுக எம்.எல்.ஏ.வாகை சந்திரசேகர் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

சினிமா துறை அழிவுக்கு காரணமானவர்கள் தமிழ் ராக்கர்ஸ்.திரைப்படங்கள் வெளியான அன்றே இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் யாருடையது,இயக்குபவர் யார் என்று பேரவையில் வாகை சந்திரசேகர் கேள்வி எழுப்பினர்.மேலும்,தமிழ் ராக்கர்ஸை மாநில மற்றும் மத்திய அரசுகளின் உதவியோடு தடுத்திட வேண்டும் என சந்திரசேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக தமிழ்ராக்கர்ஸ் இணையத்தளத்தை முடக்கிவிட்டதாக தயாரிப்பாளர் சங்கம் சில நாட்களுக்கு முன் அறிவித்தது.ஆனால்,அறிவித்த சிறித நேரத்திலேயே அந்த இணையத்தளம் மீண்டும் வேறு லிங்கில் இயங்க துவங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க