• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இயக்குனர் பாரதிராஜா மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

June 23, 2018 தண்டோரா குழு

தேசத்துக்கு எதிராக பேசியதாக திரைப்பட இயக்குனர் பாரதிராஜா மீது திருவல்லிக்கேணி போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த 11-ம் தேதி சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் பாரதிராஜா,

தமிழகத்தில் மாவோயிஸ்ட் இயக்கம் மற்றும் நக்சலைட் இயக்கங்கள் சுவடுகள் தமிழகத்தில் இல்லை. அப்படி ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி விடாதீர்கள் என்று தமிழக அரசை எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக இந்து முன்னணி அமைப்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் பாராதிராஜவின் பேச்சு வன்முறையை தூண்டும் விதத்தில் இருப்பதாக புகார் அளித்தனர்.

இந்த புகார் திருவல்லிக்கேணி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, சர்சைக்குரிய பேச்சு, பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் பேசியது ஆகிய பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி போலீசார் பாரதி ராஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக இவர் மீது வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்த நிபந்தனை ஜாமீனில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க