• Download mobile app
16 Jun 2026, TuesdayEdition - 3779
FLASH NEWS
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு சுவேதாரண்யேசுவரர் சுவாமி திருக்கோவில்

June 20, 2018 findmytemple.com

சுவாமி:அருள்மிகு சுவேதாரண்யேசுவரர்.

அம்பாள்:அருள்மிகு பிரம்மா வித்யாம்பிகை.

மூர்த்தி:சுவேதாரண்யேசுவரர்,நடராசர்,அகோரமூர்த்தி,முருகன்,காளி,துர்க்கை,புதன், அறுபத்து மூவர்.

தீர்த்தம்:சூரிய தீர்த்தம்,சந்திர தீர்த்தம்,அக்னி தீர்த்தம்.

தலவிருட்சம்:ஆல்,வில்வம்,கொன்றை.

தலச்சிறப்பு:வால்மீகி இராமாயணத்தில் குறிப்பிட்டுள்ள பழமையான பதி.காசிக்கு சமமான ஆறுதலங்களுள் இதுவும் ஒன்று.மூர்த்தி,தீர்த்தம்,விருட்சம்,ஒவ்வொன்றும் இத்தலத்தில் மும்மூன்றாக அமைந்துள்ளது.51 சக்தி பீடங்களில் ஒன்றாகும்.சிவன் அகோர மூர்த்தியாக எழுந்தருளி மருத்துவனை சம்ஹாரம் செய்துள்ளனர்.

கார்த்திகை ஞாயிறு கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.இத்தலத்தில் நடராசப் பெருமான் நவதாண்டவங்களை சகுணமாக ஆடியுள்ளார்.திருவெண்காடராகிய பட்டினத்தடிகள் வாழ்ந்தும்,சிவதீட்சை பெற்றதும்,சிவஞான போதத்தை அருளிய மெய்கண்டார் அவதரித்ததும் இத்தலமே.சிறுத்தொண்டர் இளமையில் வாழ்ந்ததும்,அவர் திருவெண்காடு நங்கை பிறந்ததும் இத்தலமே.நவக கிரக தலங்களில் இது புதன் தலமாகும்.நவக்கிரகங்களில் ஒருவரான புதன், கல்விக்கு அதிபதி.இவரை வழிபடுவதன் மூலம் கல்வி அறிவு கிடைக்கும்,பீடை போகும்,கவி பாடும் ஆற்றல் அதிகரிக்கும்.புதனை வழிபடுவோம் என்றென்றும் ஆனந்தமாக இருப்போம்.

மேலும் படிக்க