• Download mobile app
05 Aug 2026, WednesdayEdition - 3829
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் அனைத்து பத்திரிக்கையாளர்கள் சார்பில் ஷுஜாத் புகாரிக்கு அஞ்சலி

June 18, 2018 தண்டோரா குழு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ரைசிங் காஷ்மீர் பத்திரிகை ஆசிரியராக இருந்த ஷுஜாத் புகாரி கடந்த 14 ஆம் தேதி ஸ்ரீநகர் லால்சவுக் பகுதியில் காரில் சென்ற போது,அவரை வழிமறித்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.இந்த தாக்குதலில் ஷுஜாத் புகாரி,அவரது பாதுகாவலர்கள் இருவரும் உயிரிழந்தனர்.இதற்கு அம்மாநில அரசு,மத்திய அரசு,அரசியல் கட்சிகள், பத்திரிக்கையாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில்,கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் கோவை அனைத்து பத்திரிக்கையாளர்கள் ஷுஜாத் புகாரிக்கு அஞ்சலி செலுத்தினர்.அப்போது,கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சியில் நடைபெறும் இதுபோன்ற படுகொலைக்கு கண்டனம் தெரிவித்ததுடன்,மதத்திற்காக தான் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்ததை சுட்டிக்காட்டிய பத்திரிக்கையாளர்கள்,மதம்,நிர்வாகத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து வெளிக்கொண்டு வருவது என பல்வேறு வழிகளிலும் செய்தியாளர்களுக்கு அச்சுறுத்தல் வருவதாக தெரிவித்தனர்.

மேலும்,ஷுஜாத் புகாரிக்கு பல ஆண்டுகளாக அச்சுறுத்தும் இருந்தும் மாநில அரசு பாதுகாப்பு வழங்காததும் உயிரிழப்பு நடந்ததற்கு காரணம் என்று குற்றச்சாட்டிய பத்திரிக்கையாளர்கள், 1 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

மேலும் படிக்க