• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜூன்.12 ல் ஆஜராக எஸ்.வி சேகருக்கு நெல்லை நீதிமன்றம் உத்தரவு

June 18, 2018 தண்டோரா குழு

நடிகர் எஸ்.வி.சேகர் வரும் ஜூலை 12-ல் நேரில் ஆஜராக வேண்டும் என்று நெல்லை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெண் பத்திரிக்கையாளர்களை இழிவாக பேசியதாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எஸ்.வி சேகர் மீது,சென்னையில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இவரை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றமும் வலியுறுத்தியது.ஆனால் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இதற்கிடையில்,எஸ்.வி.சேகர் உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அம்மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து அவரை கைது செய்யலாம் என்றும் கூறியது. எனினும்,தமிழக போலீஸ் இன்னும் அவரை கைது செய்யாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில் எஸ்.வி சேகர் மீது தமிழகம் முழுக்க போடப்பட்ட வழக்குகளில்,நெல்லையிலும் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது,வரும் 12ம் தேதி நெல்லை நீதிமன்றத்தில் எஸ்.வி சேகர் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.மேலும்,ஆஜராகவி்ல்லை என்றால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் படிக்க