• Download mobile app
07 Jul 2025, MondayEdition - 3435
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கர்நாடகா-தமிழகம் இடையே நீரை பகிர்ந்து கொள்வதில் எந்த பிரச்னையும் இருக்காது – கர்நாடகா முதல்வர் குமாரசாமி

June 15, 2018 தண்டோரா குழு

கர்நாடகா-தமிழகம் இடையே நீரை பகிர்ந்து கொள்வதில் எந்த பிரச்னையும் இருக்காது என கர்நாடகா முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலம் வயநாடு,மடிகேரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிகவும் அதிகமாக மழை பெய்து வருகிறது.இதனால் கபினி அணை வேகமாக நிறைந்தது.நேற்று நீரின் அளவு 37,000 கன அடியானது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில்,மதுரை மீனாட்சி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த கர்நாடக முதல்வர் குமாரசாமி அங்கு செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, கடவுள் அருளால் கர்நாடகாவில் நல்ல மழை பெய்து வருவதால் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படும்.தமிழகத்துக்கு நேற்று இரவு 20,000 கன அடிநீர் திறக்கப்பட்டது.இந்த ஆண்டு தமிழகத்திற்கு தண்ணீர் தருவதில் பிரச்னை இருக்காது.தமிழகம் – கர்நாடகா இடையே நீரை பகிர்ந்து கொள்வதில் பிரச்னை வர வாய்ப்பில்லை.அணை நிறைய நிறைய இன்னும் தண்ணீர் திறக்கப்படும்.தொடர்ந்து தண்ணீர் திறக்க உள்ளதால்,இரு மாநில விவசாயிகளும் மகிழ்ச்சியடைவார்கள் எனக் கூறினார்.

மேலும் படிக்க