• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரம்ஜானை முன்னிட்டு நாளை (ஜூன் 15) பள்ளிகளுக்கு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு

June 14, 2018 தண்டோரா குழு

ரம்ஜானையொட்டி நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இஸ்லாமியர்களின் புனித ரமலான் நோன்பு துவங்கி இன்றுடன் ஒரு மாதம் முடிவடைந்த நிலையில், பிறை தெரிந்தவுடன் ரமலான் கொண்டாட்டம் ஆரம்பித்துவிடும்.முன்னதாக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஜூன் 16ம் தேதி ரமலான் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டது.எனினும் இன்று பிறை பார்க்கும் நிகழ்வு நடைபெற்றவுள்ளது.பிறை தென்பட்டால் நாளை (ஜூன் 15) ரமலான் கொண்டாப்படும். இல்லாவிட்டால் ஜூன் 16ம் தேதி ரமலான் கொண்டாடப்படும்.

ஆனால்,தமிழகம் உட்பட சில தென்னிந்திய மாநிலங்களில் நாளை (ஜூன் 15ம் தேதி) ரமலான் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இது குறித்து உறுதியான தகவல்கள் வெளிவராத நிலையில்,வார இறுதியில் ரமலான் பண்டிகை வருவதால்,மொத்தமாக விடுமுறை எடுத்து சொந்த ஊருக்குச் செல்லவும்,சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ளவும் பலர் எண்ணியிருந்தனர்.

எனினும் விடுமுறை குறித்து உறுதியான தகவல்கள் வெளிவராததால்,சிலர் தங்களது விடுமுறை திட்டங்களை ரத்து செய்தனர்.இந்நிலையில்,ரமலான் பண்டிகையை முன்னிட்டு நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க