• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீலகிரி அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு

June 14, 2018 தண்டோரா குழு

நீலகிரி மாவட்டம் உதகை அருகே அரசுப் பேருந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில்,நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து காலை 11மணிக்கு 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கிளம்பிய பேருந்தை ராஜ்குமார் என்பவர் ஓட்டி சென்றார்.பேருந்து மந்தடாபேரின் பவிலாஸ் பகுதியில் செல்லும் போது பள்ளம் இருப்பதைக் கவனித்த ஓட்டுநர்,வலதுபுறமாக திருப்பியுள்ளார்.அப்போது, எதிர்பாராவிதமாக நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் பயணிகள் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.30 பேர் படுகாயமடைந்து உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா,மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணன் ஆகியோர் விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க