• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இறந்த மகள் உயிருடன் திரும்ப வருவாள் என பிணத்துடன் காத்திருந்த தாய்

June 12, 2018 தண்டோரா குழு

ஆந்திராவில் இறந்து போன மகளின் உடலை வீட்டிலேயே மூன்று நாட்கள் வைத்திருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் ஜங்கரெட்டிகுடத்தை சேர்ந்தவர் அருணா ஜோதி (41).இவரது இல்லத்தில் இவரது தாய் மஞ்சுளா தேவி மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோர் வசித்து வந்தனர்.

இந்நிலையில் அருணா ஜோதி கடந்த மூன்று நாட்களுக்கு முன் இறந்து விட்டார்.அருணா ஜோதியின் தாயும் அவரது சகோதரரும் அவரது உடலை அடக்கம் செய்யாமலும் உறவினர்களுடன் சொல்லாமலும் தனது வீட்டிலேயே வைத்திருந்தனர்.அருணாவின் பக்கத்து வீட்டுக்காரர்கள் அருணாவின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வருகிறது என போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இதனையடுத்து,போலீசார் அருணாவின் வீட்டில் நுழைந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.இச்சம்பவம் குறித்து அருணாவின் தாயிடம் போலீசார் விசாரிக்கையில் என் மகள் மஞ்சுளா இறந்துவிட்டாலும் மீண்டும் கடவுளின் அருளால் உயிர்த்தெழுவார் என கூறியுள்ளார்.இதையடுத்து,போலீசார் கட்டாயப்படுத்தி அருணாவின் உடலை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் படிக்க