• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

June 12, 2018 தண்டோரா குழு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தீவிரமடைந்துள்ளதால் திருநெல்வேலி,கோவை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.பலத்த மழை காரணமாக இன்று கோவையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் நீலகிரி,கோவை,தேனி,திண்டுக்கல்,திருநெல்வேலி ஆகிய இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க