• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாட்ஸ்-அப் குரூப்பில் சிரிப்பு எமோஜியை அனுப்பிய 46 பேர் மீது வழக்கு !

June 11, 2018 தண்டோரா குழு

பி.எஸ்.என்.எல் பெண் ஊழியரின் மெசேஜிற்கு பதிலளிக்கும் வகையில் சிரிப்பு எமோஜி அனுப்பிய 46 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தூத்துக்குடி மண்டல பொறியாளராக பணியாற்றி வருபவர் விஜயலட்சுமி. இவர் பி.எஸ்.என்.எல் நிறுவன ஊழியர்கள் இருக்கும் வாட்ஸ-அப் குரூப்பில் பி.எஸ்.என்.எல் நிறுவன நெட்வொர்க் கவரேஜ் தொடர்பான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளர்.
இந்நிலையில் அந்த குரூப்பில் இருப்பவர்கள் நிறுவனத்தை கலாய்க்கும் வகையில் அழுகையுடன் கூடிய சிரிப்பை கொண்ட எமோஜியை பதிவிட்டனர். இதனை விஜயலட்சுமி அவமானமாகவும் குற்றவுணர்ச்சியாகவும் கருதியுள்ளார்.

இதையடுத்து, விஜயலட்சுமி பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு தகவல் தொழில்நுட்பம் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாரித்த தூத்துக்குடி தெற்கு காவல் ஆய்வாளர் வழக்குபதிவு செய்து பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் 46 ஊழியர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தார்.பின்னர் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர் அழுகையுடன் கூடிய சிரிப்பை கொண்ட எமோஜி பதிவிட்டது ஒருவரின் உணர்வை வெளிப்படுத்தும் செயல் உணர்வை வெளிப்படுத்த உரிமை உண்டு. ஆனால் அதேசமயம் ஒரு பெண் ஊழியர் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே சம்பந்தப்பட்ட ஊழியர்கள் வருத்தம் தெரிவித்து எழுத்துப்பூர்வ வாக்குமூலம் அளிக்க வலியுறுத்தினார். அனைவரும் தங்கள் செயல்பாட்டிற்கு வருத்தம் தெரிவித்து பி.எஸ்.என்.எல் ஊழியர்களும் அறிக்கை தாக்கல் அளித்தனர். இதனையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிடுவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க