• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரூ.251 ஸ்மார்ட் போன் தயாரித்த நிறுவனர் கைது !

June 11, 2018 தண்டோரா குழு

குறைந்த விலையான 251 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன் விற்பனை செய்வதாக அறிவித்த ரிங்கிங் பெல்ஸ் நிறுவனர் மோகித் கோயல் கைது செய்யப்பட்டார்.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ‘ப்ரீடம் 251’ என்ற பெயரில் உலகின் குறைந்த விலை ஸ்மார்ட்போனை ரூ.251-க்கு அறிமுகம் செய்தது.இதையடுத்து, முன்பதிவு தொடங்கிய முதல் நாளில் 30 ஆயிரம் பேர் ஆர்டர் செய்தனர். அவர்களிடமிருந்து தலா ரூ.251 பெற்றுக் கொள்ளப்பட்டது. எனினும், பல லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் முண்டியடித்ததால் சிறிது நேரத்திலேயே அந்த நிறுவனத்தின் இணையதளம் முடங்கியது.

கிட்டத்தட்ட ஏழரை கோடி செல்போனுக்கு ஆர்டர் பெற்ற நிலையில், 70 ஆயிரம் செல்போன்களை மட்டுமே ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் வினியோகித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஃபிரிடம் 251 என்ற பெயரில் ஸ்மார்ட்போன் வழங்குவதாக அறிவித்தது பெரும் மோசடி திட்டம் என்று சர்ச்சை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், ஏற்கனவே 16 லட்சம் ரூபாய் மோசடி புகாரில் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட மோகித் கோயலுக்கு மே 31 ஆம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது. இந்நிலையில், டெல்லி போலீசார் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் பணம் பறித்தல் குற்றத்திற்காக மோகித் கோயல் உள்பட மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க