• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

தெலுங்கானா மாநிலத்தில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் இருவர் சுட்டுக்கொலை

August 8, 2016 தண்டோரா குழு

பிரதமர் நேற்று தெலுங்கானாவிற்கு வந்து சென்ற நிலையில் இன்று அதிகாலை முதல் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் இருவர் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெலுங்கானா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் இன்று காலை தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் மேஹபூப்நகரில் உள்ள ஷாட்நகர் மில்லேனியம் டவரில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியைச் சுற்றிவளைத்த தெலுங்கானா காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் சரணடையக் கூறியுள்ளனர்.

ஆனால் தாக்குதலைத் துவங்கியதால் காவல்துறையினரும் எதிர் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் தீவிரவாதி என நம்பப்படும் நதீம் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், மேலும் இருப்பவர்களைப் பிடிக்க முயற்சிப்பதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள் பிரதமரின் நிகழ்ச்சியைக் குறிவைத்து வந்திருக்கலாமோ என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பிரதமர் உயிருக்கு ஆபத்து இருப்பதால் சுதந்திர தின உரையை குண்டு துளைக்காத மேடையில் இருந்து பேசவேண்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க