• Download mobile app
04 Feb 2026, WednesdayEdition - 3647
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாடோடிகள் 2 முடிந்தது விரைவில் “நாடோடிகள் 3” சமுத்திரகனி அதிரடி அறிவிப்பு

June 8, 2018 தண்டோரா குழு

சமுத்திரகனி இயக்கத்தில் கடந்த 2009ல் வெளியான படம் நாடோடிகள்.இப்படத்தில்,சசிக்குமார், விஜய் வசந்த்,பரணி,அனன்யா,அபிநயா,கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிய இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதற்கிடையில்,ஏறத்தாழ 10 ஆண்டுகள் கழித்து நாடோடிகள் இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு மதுரையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கியுள்ளது.இதில்,சசிகுமார்,அஞ்சலி,அதுல்யா ரவி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.அதைபோல்,முதல் பாகத்தில் நடித்த பரணி,கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இந்நிலையில்,இன்று நாடோடிகள் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தெரிவித்துள்ள சமுத்திரகனி நாடோடிகள் 3ல் வெல்வோம் என்றும் ட்வீட் செய்துள்ளார்.

மேலும் படிக்க