• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ரயில் நிலையம் முற்றுகை

June 7, 2018 தண்டோரா குழு

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

நீட் தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்ட நிலையில்,நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவையில் உள்ள ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.நீட் தேர்வின் காரணமாக மாணவர்களின் உயிர்கள் பறிபோவதாகவும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.மேலும் நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

மேலும் படிக்க