• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ரயில் நிலையம் முற்றுகை

June 7, 2018 தண்டோரா குழு

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

நீட் தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்ட நிலையில்,நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவையில் உள்ள ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.நீட் தேர்வின் காரணமாக மாணவர்களின் உயிர்கள் பறிபோவதாகவும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.மேலும் நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

மேலும் படிக்க