• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெய்ப்பூர் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் கோசாலை பசுக்கள் பலி

August 6, 2016 தண்டோரா குழு

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பசுக்களை பராமரிக்க அமைக்கப்பட்ட கோசாலையில் கடந்த இரு வாரங்களில் மட்டும் 500க்கும் மேற்பட்ட பசுக்கள் உணவு இல்லாமல் இறந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியானதை அடுத்து பா.ஜ.கவைச் சேர்ந்த முதல்வர் வசுந்தரா ராஜே சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.

ஜெய்ப்பூரில் உள்ள அந்தக் கோசாலையில் பசுக்களைப் பராமரிக்கவும் அவற்றிற்கு உணவளிக்கவும் நியமிக்கப்பட்ட கூலிகளுக்கும் ஜெய்ப்பூர் முனிசிபாலிட்டிக்கும் இடையே நடைபெற்று சம்பளம் தொடர்பான பிரச்சனையில் கூலிகள் ஒரு மாத காலமாக பணிக்குச் செல்லாமல் இருந்துள்ளனர்.

இதன் காரணமாக அங்கு இருந்த பசுக்களில் சுமார் 500க்கும் அதிகமானவை இறந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் தற்போதைய நிலையில் அங்கு சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட பசுக்கள் அப்புறப்படுத்தப்படாமல் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் முதல்வர் சம்பவ இடத்திற்குச் செல்வதால் அந்த இடம் விரைவாகச் சுத்தம் செய்யப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் இந்தச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்ப்பதாகத் தன்னார்வ தொடர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்

மேலும் படிக்க