• Download mobile app
18 Jul 2026, SaturdayEdition - 3811
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நூறு ரூபாய் லஞ்சம் தர மறுத்த இருவரைக் கொன்ற காவலர்கள்

August 6, 2016 தண்டோரா குழு

உத்திரபிரதேசம் கான்பூரைச் சேர்ந்த உறவினர்களான திலீப் யாதவ் (22) மற்றும் பங்கஜ் யாதவ் (24) இருவரும் கூலித் தொழிலாளிகள். இவர்கள் இருவரும் மேலும் 4 பேருடன் மெயின்பூர் பகுதிக்குச் செங்கல் லோடு ஏற்றிச் சென்றுள்ளனர்.

அப்போது சோதனைச் சாவடியில் இவர்களின் வாகனத்தை மறித்த போலீசார், 100 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் வாகனத்தை அனுமதிப்பதாகக் கூறியுள்ளனர். இதற்குத் தொழிலாளிகள் மறுத்ததால், அவர்களை போலீசார் தாக்கி உள்ளனர்.

இதில் டிரைவர் உள்ளிட்ட மற்றவர்கள் தப்பிச் செல்ல திலீப் மற்றும் பங்கஜ் இருவரும் போலீசிடம் சிக்கிக் கொண்டுள்ளனர். போலீசார் தொடர்ந்து கடுமையாகத் தாக்கியதில் இருவரும் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அவர்களின் உடல்களைக் குளம் ஒன்றில் போலீசார் போட்டுள்ளனர்.

குளத்தில் இருந்து 2 தொழிலாளர்களின் உடலைக் கண்டெடுத்த, அவர்களின் உறவினர்கள் போலீசாரிடம் கேட்டதற்கு, தாங்கள் அவர்களைத் தாக்கவில்லை எனவும், அவர்களும் தப்பிச் சென்று விட்டதாகவும் கூறி உள்ளனர். ஆனால் பிரேத பரிசோதனையில் அவர்கள் 6 போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அப்பிரச்சனை பெரிதானது. பின்னர் உயரதிகாரிகள் நடத்திய விசாரணையில் உண்மை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க