• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிரியா புத்தகத்தால் தேன்நிலவு பயணத்தில் அதிர்ச்சியடைந்த பெண்

August 6, 2016 தண்டோரா குழு

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் சமீபத்தில் தன்னுடைய தேனிலவுக்காக துருக்கி சென்றார். ஆனால் பாதுகாப்புப் படையினர் அவருக்கு மறக்க முடியாத வேதனையைக் கொடுத்து விட்டனர். சிரிய நாட்டு இலக்கியம் குறித்த புத்தகத்தை விமானத்தில் படித்ததுதான் அவர் செய்த தவறு.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல மேற்கத்திய நாடுகளுக்கு எதைப் பார்த்தாலும் தீவிரவாத பயம் வந்து ஒட்டிக் கொள்கிறது. அதில் லேட்டஸ்டாக சிக்கிக் கொண்டவர்தான் இந்தப் பெண்.

பைசா ஷாஹீன்(27) இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இவருக்குச் சமீபத்தில் திருமணம் நடந்தது. தேனிலவுக்காக துருக்கி செல்லத் திட்டமிட்டார் ஷாஹீன் தம்பதியினர். இதையடுத்து விமானம் மூலம் இவர்கள் துருக்கிக்கு பயணமானார். அங்குச் சென்று விட்டு தாயகம் திரும்பிய ஷாஹீனுக்கு தெற்கு யார்க்ஷயரில் உள்ள டன்காஸ்டர் விமான நிலையத்தில் அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கு அவரைத் தடுத்து நிறுத்திய இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள், நீங்கள் விமானத்தில் படித்த புத்தகம் குறித்து எங்களுக்குத் தகவல் வந்துள்ளது. உங்களைத் தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்க வேண்டும் என்று கூறி அழைத்துச் சென்று உள்ளனர். அங்கு அவரிடம் துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டது.

நீண்ட நேர விசாரணைக்குப் பின்னர் அவரை விடுவித்தனர். ஷாஹீன் செய்த தவறு, தனது விமான பயணத்தின் போது, சிரியா பேசுகிறது கலை மற்றும் கலாச்சாரத்தின் துவக்கம் என்னும் நூலைப் படித்தது தான். சிரிய நாடு தொடர்பான புத்தகத்தைப் படித்ததால் அவர் ஒரு தீவிரவாதியாக இருக்கலாம் என்ற அச்சமும், சந்தேகமும் பாதுகாப்புப் படையினருக்கு வந்து விட்டது. இதனால் அவரை விசாரித்துள்ளனர்.

இது குறித்து ஷாஹீன் கூறுகையில், பாதுகாப்பு என்பது அவசியமானது தான். ஆனால், சந்தேகப்படுவதற்கு ஒரு அளவில்லையா? புத்தகம் படிப்பது கூடத் தவறா? நான் என்னுடைய தேனிலவு நாட்களை நினைத்து மகிழ்வதை விட இந்தச் சம்பவம் குறித்து அதிகம் எண்ணி வேதனை தான் அடைகிறேன் எனக் கூறியுள்ளார்.

மேலும், தான் படித்த புத்தகம் இங்கிலீஷ் பென் (English PEN) என்னும் விருதைப் பெற்றது. கடந்த மே மாதம் இங்கிலாந்தில் உள்ள பிராட்போர்ட் ஆங்கில இலக்கிய விழாவில் அந்தப் புத்தகம் தனக்குப் பரிந்துரை செய்யப்பட்டது என்று அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க