• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போராட்டமே கூடாது என்பது ரஜினியின் கருத்து அல்ல – இயக்குனர் ப. ரஞ்சித்

May 31, 2018 தண்டோரா குழு

போராட்டமே கூடாது என்பது ரஜினியின் கருத்து அல்லஎன இயக்குநர் ரஞ்சித் கூறியுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த சம்பவத்திற்கு சமூக விரோதிகள் தான் காரணம் எனக் கூறினார்.நேற்று ரஜினி தூத்துக்குடி சம்பவம் குறித்து சமூக விரோதிகளால் தான் போராட்டம் கலவரமானது என பேசியது தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.அதைபோல் போராட்டம் தொடர்ந்தால் தமிழ்நாடு சுடுகாடு ஆகும் என்றும் ரஜினி கூறியிருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சில அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் ப.ரஞ்சித்,

போராட்டமே கூடாது என்பது ரஜினியின் கருத்து அல்ல.சில பிரச்னைகளுக்கு போராட்டம் நடத்தி உரிமைகளைப் பெறுவதில் தவறில்லை. போராட்டம் நடத்தியே உரிமைகளை பெற வேண்டியுள்ளது. தூத்துக்குடி மக்களின் வலிகளை அறிந்த பிறகு ரஜினி கருத்துதெரிவித்துள்ளார் என ரஞ்சித் கூறியுள்ளார்.

மேலும் படிக்க