• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உதகை: ஊதிய உயர்வை அமுல்படுத்த கோரி அஞ்சல் ஊழியர்கள் போராட்டம்

May 30, 2018 தண்டோரா குழு

உதகையில் ஊதிய உயர்வை அமுல்படுத்த கோரி அஞ்சல் ஊழியர்கள் திருவோடு எடுத்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் இன்று(மே 30)ஈடுபட்டனர்.

கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடெங்கும் பல்வேறு போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றது.இதன் ஒரு பகுதியாக உதகையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு அஞ்சல் ஊழியர்கள் 9 ஆவது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் 7 வது ஊதிய குழு கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

மேலும்,கடந்த 8 நாட்களாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தின் 9 வது நாளான இன்று நீலகிரியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் தபால் அலுவலகம் முன்பு திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க