• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு : ஈரோடு மாவட்டம் முதலிடம்

May 30, 2018 தண்டோரா குழு

தமிழக பள்ளி கல்வி வரலாற்றில் முதல் முறையாக 11ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு, அதனுடைய முடிவுகள் வெளியிடப்பட்டது.

10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டுமே இதுவரை பொதுத் தேர்வுகள் நடைபெற்று வந்தது.தமிழக பள்ளி கல்வி வரலாற்றில் முதல் முறையாக 2017-18-ம் கல்வியாண்டில் 11-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8,63,668 மாணவ-மாணவிகள் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர்.தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி, தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

இதில்,தேர்வு எழுதிய சுமார் 91.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அதன்படி 97.3 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.திருப்பூர் மாவட்டம் இரண்டாவது இடத்தையும் கோயம்புத்தூர் மாவட்டம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

மாணவர்கள் 87.4% தேர்ச்சியும்,மாணவிகள் – 94.6% தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.அதைப்போல் 188 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியும் 2,054 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளன.இயற்பியல் – 93 %, வேதியல் – 92.7%, உயிரியல் – 92.6%, தாவரவியல் – 89.3%, விலங்கியல் -91.8%, கணிதம் – 92.5%, கணினி அறிவியல் – 95.3% தேர்ச்சி பெறுள்ளனர்.

மாணவர்கள் தங்கள் முடிவுகளை தமிழக அரசின் இணையதளங்கள் மூலமாக பார்த்து வருகின்றனர். மேலும்,மறு கூட்டலுக்கும் விடைத்தாள் நகல் பெறவும் ஜூன் 1-4ம் தேதி வரை பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க