• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் தூக்குபோட்டு இளைஞர் தற்கொலை

May 28, 2018 தண்டோரா குழு

கோவை காந்திபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தில் வடமாநில தொழிலாளி ராஜேந்திரசிங் என்பவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் புதிய மேம்பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த மேம்பால கட்டுமான பணியில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டுவந்தனர். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் 6.30 மணிக்கு பாலம் கட்டுமான பணிக்கு வேலைக்கு வந்த வடமாநில தொழிலாளியான ராஜேந்திர சிங் என்பவர் பாலத்தின் மேல் பகுதியில் பணிக்கு சென்று, அங்கிருந்த கம்பியில் துணி மூலம் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

மற்ற தொழிலாளர்கள் வேலைக்கு வந்த போது ராஜேந்திர சிங் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதன் பின் உடனடியாக காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ராஜேந்திர சிங் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின் ராஜேந்திர சிங் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க