• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உ.பி.யில் இனி வீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் கட் – மாவட்ட நிர்வாகம்

May 26, 2018 தண்டோரா குழு

வீட்டில் கழிவறை இல்லாத அரசு ஊழியர்களுக்கு மே மாத முதல் சம்பளம் வழங்கப்படாது என உத்தரபிரதேச மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Abhiyan) நாடு முழுவதும் கழிப்பறை கட்டும் நோக்கத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லாத நாடாகவும் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டப்படுவதே இவர்களது நோக்கம்.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் சீதாபூர் மாவட்ட ஆட்சியர் அரசு ஊழியர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில் அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இருக்கும் கழிவறையை புகைப்படம் எடுத்து அத்துடன் கழிப்பறை கட்டியதற்கான அடையாள சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த உத்தரவின்படி சான்றை சமர்பிக்காத ஊழியர்களுக்கு மே மாதத்திற்கான சம்பளம் நிறுத்தி வைக்கப்படும்.கழிப்பறை கட்டியதற்கான சான்றுகளை சமர்பித்த பின்னரே அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க