• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது

May 24, 2018 தண்டோரா குழு

சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கைதைக் கண்டித்து கோவையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து முதல்வரிடம் பேச அனுமதி வழங்கவில்லை என கூறி தலைமை செயலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதனைக் கண்டித்து கோவையை அடுத்த வடகோவை பகுதியில்,திமுகவினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழக அரசை கண்டித்து திமுகவினர் கோஷங்களை எழுப்பினர்.திமுகவினரின் போராட்டம் காரணமாக போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 80 க்கும் மேற்பட்ட திமுகவினர காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் படிக்க