• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்பதே எனக்கான முதல் பணி -மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

May 24, 2018 தண்டோரா குழு

தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்பதே எனக்கான முதல் பணிதூத்துக்குடி புதிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்று முன்தினம் நடைபெற்ற பேரணியில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர்.60க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதையடுத்து, தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ்யும்,எஸ்.பி மகேந்திரன் இருவரும் மாற்றப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து புதிய ஆட்சியராக சந்தீப் நந்தூரி,எஸ்.பியாக முரளி ரம்பாவும் இன்று பதவியேற்றனர்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்தபோது செய்தியாளர்கள் சந்தித்து பேசினார்.அப்போது பேசிய அவர், தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்பதே எனக்கான முதல் பணி.துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.அந்தக் கமிஷன் விசாரணையை தொடங்கவுள்ளது.கமிஷன் விசாரணை முடிந்த பிறகே நடவடிக்கை குறித்து முடிவெடுக்க இயலும்.மேலும்,அரசு மருத்துவமனையில் உணவு, குடிநீர் உள்ளிட்டவை தங்கு தடையில்லாமல் கிடைப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது என கூறினார்.

மேலும் படிக்க