• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோலியின் சவாலை ஏற்று கொண்ட பிரதமர்

May 24, 2018 தண்டோரா குழு

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சவாலை ஏற்றுக்கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி.

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்,அவர் புஷ் அப் எடுக்கும் வீடியோ காட்சியை ட்விட்டரில் வெளியிட்டார்.அதன் பின் இதுபோன்று உடற்பயிற்சி எடுக்கும்படி கிரிக்கெட் வீரர் விராட் கோலி,பேட்மிண்டன் சாய்னா நேவால் மற்றும் பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோருக்கு சவால் விட்டார்.

இந்த சவாலை ஏற்ற வீரர் விராட் கோலி ஸ்பைடேர் பிளாங்க் (Spider Plank) செய்வதை வீடியோ எடுத்து ட்விட்டரில் பதிவிவிட்டார்.அதன் பின் விராட் கோலி அவரது மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஆகியோருக்கு இந்த சவாலை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி ட்விட்டரில் கோலியின் சவாலை நான் ஏற்றுக்கொண்டேன் எனவும் விரைவில் நான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியிடுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க