• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோலியின் சவாலை ஏற்று கொண்ட பிரதமர்

May 24, 2018 தண்டோரா குழு

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சவாலை ஏற்றுக்கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி.

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்,அவர் புஷ் அப் எடுக்கும் வீடியோ காட்சியை ட்விட்டரில் வெளியிட்டார்.அதன் பின் இதுபோன்று உடற்பயிற்சி எடுக்கும்படி கிரிக்கெட் வீரர் விராட் கோலி,பேட்மிண்டன் சாய்னா நேவால் மற்றும் பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோருக்கு சவால் விட்டார்.

இந்த சவாலை ஏற்ற வீரர் விராட் கோலி ஸ்பைடேர் பிளாங்க் (Spider Plank) செய்வதை வீடியோ எடுத்து ட்விட்டரில் பதிவிவிட்டார்.அதன் பின் விராட் கோலி அவரது மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஆகியோருக்கு இந்த சவாலை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி ட்விட்டரில் கோலியின் சவாலை நான் ஏற்றுக்கொண்டேன் எனவும் விரைவில் நான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியிடுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க