• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து கோவையில் கடைகள் அடைப்பு

May 24, 2018 தண்டோரா குழு

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டை கண்டித்து, தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் கோவையில் பல்வேறு பகுதிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தின் காரணமாக 12 பேர் உயிரிழந்தனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக முக்கிய வணிக வீதிகளாக உள்ள டவுன்ஹால்,காந்திபுரம், உள்ளிட்ட பகுதிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டு உள்ளது.இருப்பினும் மாநகரின் சில இடங்களில் கடைகள் வழக்கம் போல திறக்கப்பட்டுள்ளது.

மேலும்,தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டிற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகர்கள் வலியிறுத்தினர்.மாவட்டத்தில் 50% கடைகள் அடைக்கப்பட்டு உள்ள நிலையில்,பல கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு ஏற்பட்டு உள்ளது.

மேலும் படிக்க