• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தர்ணாவில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் குண்டுக்கட்டாக கைது

May 24, 2018 தண்டோரா குழு

முதல்வர் அறை முன் தர்ணா போராட்டம் நடத்தி வந்த மு.க.ஸ்டாலினை காவலர்கள் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று வெளியேற்றியுள்ளனர்.

பேரவை அலுவல் ஆய்வுக்கூட்டத்தை புறக்கணித்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறைமுன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்க வேண்டும் என்றும் 13 பேரை கொன்ற விவகாரத்தில் முதல்வர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி
மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் முதல்வர் அறைமுன் போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து,ஸ்டாலின் குண்டுக்கட்டாக காவலர்களால் வெளியேற்றப்பட்டர்.வெளியேற்றப்பட்ட ஸ்டாலின் 4-ம் எண் வாயில் முன்பு மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்.மேலும் தலைமைச்செயலகம் முன்பு 500-க்கும் மேற்பட்ட திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க