• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாரதி நடந்த வீதியில் நான் வந்து பேசுவது காலத்தின் கட்டாயம் – கமல்

May 18, 2018 தண்டோரா குழு

பாரதி நடந்த வீதியில் நான் வந்து பேசுவது காலத்தின் கட்டாயம் என நெல்லையில் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் அரசியல் கட்சி துவங்கியுள்ளன நடிகர் கமலஹாசன் தமிழகம் முழுவதும் மாற்றத்தை நோக்கி என்ற பெயரில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.நேற்று முன்தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்கிய கமல் இரண்டாவது நாளான நேற்று தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் தொடங்கி திருச்செந்தூர்,காயல்பட்டினம்,ஆறுமுகநேரி, புன்னக்காயல்,ஏரல்,பண்டாரவிளை ஆகிய ஊர்களுக்கு சென்று அப்பகுதி மக்களை சந்தித்து பேசினார்.

இந்நிலையில்,சுற்றுப்பயணத்தின் மூன்றாவது நாளான இன்று கமல் நெல்லையில் மக்களை சந்தித்தார்.நெல்லையில் உள்ள டவுண் வாகையடி முனையில் மக்கள் மத்தியில் கமல் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

“வழிப்போக்கனாக பல முறை நெல்லை வந்துள்ளதேன்.பெருந்தலைவர்கள் நின்று பேசிய இடத்தில் நானும் நின்று பேசிக் கொண்டிருக்கிறேன்.பாரதி நடந்த வீதியில் பேசுவது காலத்தின் கட்டாயம். தமிழகத்தை செதுக்கும் கூர் உளி மக்கள் நீதி மய்யம்”.இவ்வாறு அவர் பேசினார்.

இதனைத்தொடர்ந்து ஆலங்குளம்,தென்காசி,சங்கரன்கோவில்,ராஜபாளையம்,உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களை சந்திக்க உள்ள கமல் விருதுநகரில் இன்றைய சுற்றுப் பயணத்தை நிறைவு செய்கிறார்.

மேலும் படிக்க