• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சியில் குடிபோதையில் பேருந்தை தாறுமாறாக ஓட்டிய ஓட்டுனர் கைது

May 16, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் குடிபோதையில் பேருந்தை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஓட்டுனரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காங்கயம் பேருந்து நிலையத்தில் இருந்து 70க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ABT என்ற தனியார் பேருந்து பொள்ளாச்சி நோக்கி புறப்பட்டது. பேருந்தை ஓட்டுனர் விஜய் ஓட்டி வந்தார். அவர் பேருந்து புறப்பட்டது முதலே தாறுமாறாக பேருந்தை ஓட்டியுள்ளார். இதனைக் கண்ட பயணிகள் விஜயை எச்சரித்துள்ளனர். ஆனாலும் பேருந்தை விஜய் அஜாக்கிரதையாக ஒட்டிவந்துள்ளார். அப்போது,பேருந்து பொள்ளாச்சி பல்லடம் சாலையில் ராஜேஸ்வரி திடல் அருகே வந்தபோது சாலையோரம் நடந்து சென்ற தனபாக்கியம் என்பவர் மீது மோதியது.

இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் ஓட்டுனர் விஜயை பிடித்து தர்ம அடி கொடுத்தியுள்ளனர். இதையடுத்து,தகவலறிந்து அங்கு வந்த போலீசார் ஓட்டுநர் விஜயை கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர் மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டியது தெரியவந்தது.
மேலும் விபத்தில் காயம் அடைந்த தனபாக்கியம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க