• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

117 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார் – குமாரசாமி

May 16, 2018 தண்டோரா குழு

மஜத தலைவர் குமாரசாமி கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து . காங்கிரஸ், மஜத சேர்ந்த 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தை அளித்து ஆட்சி அமைக்க குமாரசாமி உரிமை கோரினார்.

கர்நாடகாவில் யார் ஆட்சி அமைக்கவுள்ளனர் என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ், மஜத பலத்தை காட்ட எம்.எல்.ஏக்கள் அணிவகுப்பு முடிவு செய்தனர். ஆளுநரின் முன் அணிவகுப்பு நடத்த இருகட்சிகளும் அனுமதி கேட்டிருந்தன. ஆனால், காங்கிரஸ், மஜத கோரிக்கையை கர்நாடக ஆளுநர் வஜூபாய் நிராகரித்தார். பின்னர், காங்கிரஸ், மஜத சேர்ந்த 10 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து, மஜத தலைவர் குமாரசாமி கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து. காங்கிரஸ், மஜத சேர்ந்த 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தை அளித்து ஆட்சி அமைக்க குமாரசாமி உரிமை கோரினார். அவருடன் காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா, மூத்த தலைவர் வீரப்ப மொய்லி உள்ளிட்டோரும் சென்றனர். இதற்கிடையில், கர்நாடக ஆளுநர் மாளிகை முன் காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏக்கள் திரண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க