• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் சென்னையில் காலமானார்

May 15, 2018 தண்டோரா குழு

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன்(71) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

கடும் மூச்சுத்திணறல் காரணமாக எழுத்தாளர் பாலகுமாரன் நேற்று சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இவர் 100க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 200க்கும் மேற்பட்ட நெடுங்கதைகள் எழுதியுள்ளார். தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது பெற்றுள்ள பாலகுமாரன், இலக்கிய சிந்தனை விருதும் பெற்றுள்ளார்.

இதுமட்டுமின்றி,பாலகுமாரன் நாயகன்,பாட்ஷா,சிட்டிசன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார்.மேலும்,இயக்குனர் பாக்யராஜின் இது நம்ம ஆளு படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

பாலகுமாரன் இரும்பு குதிரை என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க