• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கமல் கூட்டும் கூட்டத்தில் நல்லக்கண்ணு பங்கேற்கவில்லை – இந்திய கம்யூ., அறிக்கை வெளியீடு

May 15, 2018 தண்டோரா குழு

காவிரிக்காக கமல் கூட்டும் கூட்டத்தில் நல்லக்கண்ணு பங்கேற்கவில்லை என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டுவதற்காக அனைத்து விவசாய அமைப்புகளுடன் நேற்று ஆலோசனை நடத்தி கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தலைமையில் ‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்’ என்ற கூட்டம் மே 19- ம் தேதி நடைபெறும் என அறிவித்தார்.

இந்நிலையில்,காவிரிக்காக கமல் கூட்டும் கூட்டத்தில் நல்லக்கண்ணு பங்கேற்கவில்லை என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில்,சென்னையில் நடைபெற இருக்கும் இக்கூட்டத்திற்கு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என தெரிவித்திருந்த கமல்ஹாசன் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அழைப்பு விடுத்தார்.

மேலும் படிக்க