• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரதமர் மோடியை எச்சரியுங்கள்.. குடியரசு தலைவருக்கு மன்மோகன்சிங் கடிதம்

May 14, 2018 தண்டோரா குழு

பிரதமர் மோடி மிரட்டும் தோணியில் பேசி வருகிறார்.அவரை எச்சரித்து வையுங்கள் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு,முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதி உள்ளார்.

இது தொடர்பாக மன்மோகன்சிங் குடியரசுத்தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

கடந்த காலங்களில் இந்திய பிரதமர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் நல்லிணக்கத்தையும்,நல்லொழுக்கத்தையும் பேணி வந்துள்ளனர்.ஆனால் தற்போது ஜனநாயக ஆட்சியில் அரசின் தலைமை இடத்தில் உள்ள பிரதமர்,முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரஸ் தலைவர்களையும்,உறுப்பினர்களையும் மிரட்டும் விதத்திலும்,எச்சரிக்கும் வகையிலும் பேசி வருகிறார்.இழிவுபடுத்தும் விதமாகவும்,பொது அமைதியை சீர்குலைக்கும் விதமான வார்த்தைகளை பிரதமர் மோடி பயன்படுத்துகிறார்.

தேர்தல் பிரச்சாரத்திலும் அரசியல் ஆதாயத்திற்காக அச்சுறுத்தும் மொழியில் பிரதமர் பேசியதை எதிர்பார்க்கவில்லை.எனவே காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராகவோ அல்லது மற்ற கட்சி நபர்களுக்கு எதிராகவோ இது போன்ற தேவையற்ற,மிரட்டும் தொனியிலான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்று பிரதமரை,குடியரசுத் தலைவர் எச்சரிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குடிரயசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு மன்மோகன்சிங் அனுப்பியுள்ள அந்த கடிதத்தில். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம்,முகுல்வாஸ்னிக்,அசோக் கெலாட் உள்ளிட்டோரும் கையொப்பமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க