• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 128 மில்லி மீட்டர் மழை பதிவு!

May 11, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஐந்து குளங்கள் நிரம்பி உள்ளது.நேற்று மட்டும் 128 மில்லி மீட்டர் மழை கோவை மாவட்டத்தில் பதிவாகி உள்ளது.

கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் கோடை மழை சராசரி அளவையும் தாண்டி பெய்து வருகிறது.கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரவு நேரத்தில் பெய்து வரும் மழையினால் கிருஷ்ணாம்பதி,செல்வாம்பதி,முத்தண்ணன்,செல்வசிந்தாமணி,சிங்காநல்லூர் ஆகிய குளங்களுக்கு தண்ணீர் வரத்து இருந்தது.

மேலும் மருதமலை,வடவள்ளி கால்வாய் வழியாக வந்த தண்ணீரால் இந்த குளங்கள் நிரம்பி உள்ளன.உக்கடம் குளம்,வாலாங்குளம் 80 சதவீதம் நிரம்பி உள்ளது.இருப்பினும் நொய்யல் ஆற்றில் தண்ணீர் வராத காரணத்தினால் நொய்யல் நீர் ஆதாரத்தில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் வரத்து இல்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதனால் நீர்வழி பாதைகளை சீர் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நேற்று பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் 128 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.அதிகபட்சமாக,தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் அமைந்து உள்ள பகுதியில் 40 மில்லி மீட்டர் மழையும்,குறைந்த பட்சமாக வால்பாறையில் 7 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

மேலும் படிக்க