• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேராசிரியை நிர்மலாதேவியின் ஜாமின் மனு தள்ளுபடி

May 11, 2018 தண்டோரா குழு

பேராசிரியை நிர்மலாதேவியின் ஜாமின் மனுவை ஸ்ரீவில்லிபுதூர் குடும்பநல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டதாக கைது செய்யப்பட்டார்.இது தொடா்பாக தமிழக அரசு சார்பில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடைபெற்று வருகிறது.அதைபோல் ஆளுநா் பன்வாரிலால் புரோகித் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையிலான குழு ஒன்றையும் நியமித்து விசாரணைகள் நடைபெற்று வந்தன.இதற்கிடையில்,ஆளுநா் பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்த சந்தானம் தலைமையிலான குழுவின் விசாரணை நிறைவு பெற்று விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில்,ஜாமீன் கோரி நிர்மலா தேவி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் நிர்மலா தேவியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்திரவிட்டது.

மேலும் படிக்க