• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெல்லியில் பலத்த புழுதி புயல் தாக்குதல்

May 8, 2018 தண்டோரா குழு

தலைநகரமான டெல்லியில் நேற்று இரவு சுமார் 11.20 மணியளவில் புழுதி புயல் பயங்கரமாக தாக்கியது.இந்த புயலானது மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றிலும் தாக்கியுள்ளது.இதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த புழுதி புயலால் ரோஹ்தக்,ஜஜார்,குருகுரம்,பாக்தாத்,மீரட், சண்டிகர்,அரியானா மற்றும் காஜியாபாத் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் சேதமடைந்துள்ளது.மேலும்,அடுத்த 48 மணி நேரத்திற்கும் டெல்லி அரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களுக்கும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புழுதி புயல் தாக்கும் என்பதால் இன்று டெல்லி,குருக்ரம், நொய்டா, கஜியாபாத் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க