May 7, 2018
தண்டோரா குழு
மான் வேட்டையாடிய வழக்கில் விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து நடிகர் சல்மான் கான் தொடர்ந்த வழக்கு, ஜூலை 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த 1998ம் ஆண்டு, 2 மான்களை வேட்டையாடிய வழக்கில், ஹிந்தி நடிகர் சல்மான் கானுக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நீதிமன்றம் கடந்த சில வாரங்களுக்கு முன் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதைத் தொடர்ந்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, ஜோத்பூர் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடிகர் சல்மான்கான் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக இன்று காலை, நீதிமன்றத்தில் நடிகர் சல்மான்கான் ஆஜரானார்.அப்போது வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூலை 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.