• Download mobile app
05 Aug 2026, WednesdayEdition - 3829
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்திற்கு அங்கீகாரம் !

May 5, 2018 தண்டோரா குழு

தமிழ்நாடு மூத்தோர் தடகள சங்கம் கோவை மாவட்ட மூத்தோர் தடகள சங்கதினை அங்கீகாரம் செய்தமைக்கு அதன் தலைவர் தெய்வ சிகாமணி நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் தலைவர் தெய்வ சிகாமணி,

கோவை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் சார்பில் பல்வேறு வகையான போட்டிகளை நடத்தி வந்துள்ளோம். அதன் பலனாக தமிழ்நாடு மூத்தோர் தடகள சங்கம் கோவை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தை அங்கீகாரம் செய்துள்ளது. இதற்காக தமிழ்நாடு மூத்தோர் தடகள சங்கதின் தலைவர் தேவராம், செயலாளர் பழனிசாமி பொருளாளர் ராதாமணி உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த வருடம் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போட்டியில் 426 தடகள வீரர்கள் கலந்து கொண்டதாகவும் இதில் 170 பேர் தேர்வு செய்யப்பட்டு கரூரில் நடைபெற மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டனர். அதில் 36 பேர் தங்க பதக்கமும் 42 பேர் வெள்ளி பதக்கமும் 27 பேர் வெண்கல பதக்கமும் பெற்றனர். அதை போல் இந்த வருடம் ஜூன் 17ம் தேதி தடகள போட்டி நடைபெறவுள்ளது. இதில் 30 வயதிற்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம் போட்டிகள் காலை 8 முதல் மாலை 6 வரை நடைபெறுகிறது. இதில் 52 வகையான போட்டிகள் நடைபெறவுள்ளது.
இதில் பங்குபெற விருப்பமுள்ளோர் சங்கத்தில் நேரடியாக தொடர்பு கொள்ளவும் எனக் கூறினார்.

இந்த சந்திப்பின்போது செயலாளர் உன்னி கிருஷ்ணன், பொருளாளர் குப்புசாமி, துணைத் தலைவர் கோபாலசாமி, ஆலோசகர் ஜோசப், ஜெயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க