• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவுக்கு நீட் தேர்வு எழுத வரும் தமிழக மாணவர்களுக்கு உதவிகள் வழங்க கேரள முதல்வர் உத்தரவு

May 4, 2018 தண்டோரா குழு

நீட் தேர்வு எழுத கேரளாவுக்கு வரும் தமிழக மாணவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்க கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உத்திரவிட்டுள்ளார்.

மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை 6ம் தேதி நடக்கிறது.தமிழகத்தில் மதுரை,நெல்லை,திருச்சி,கோவை,நாமக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மட்டுமே இந்த தேர்வுக்கான மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.நெல்லை,தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்குக் கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் பத்தனம்திட்டா பகுதியிலும் பல்வேறு மாணவ மாணவிகளுக்கு ராஜஸ்தானிலும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில்,நீட் தேர்வு எழுத கேரளா வரும் தமிழக மாணவர்களுக்கு உதவ முக்கிய பேருந்து நிலையங்கள்,ரயில் நிலையங்களில் உதவி மையங்களை அமைக்க மாவட்ட ஆட்சியர்கள்,காவல் கண்காணிப்பாளர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்திரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க