• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீட் தேர்வு விவகாரம்: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

May 3, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் நீட் தேர்வு மையம் கூடுதலாக ஒதுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு மே 6ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் காளிமுத்து மைலவன் என்பவர் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்வு மையம் ஒதுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் இதனை பொது அறிவிப்பாக கருதி தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையம் தொடர்பான விபரத்தை சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையில், தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் ஒதுக்கிய நீட் தேர்வு மையத்தை தமிழகத்திலேயே ஒதுக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,தமிழக மாணவர்களுக்கு கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் ஒதுக்கப்பட்டுள்ள மையங்களுக்கு பதில் தமிழத்திலேயே மையம் ஒதுக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. மேலும், வேறு மாநிலங்களில் ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு சென்று தேர்வெழுத தமிழக மாணவர்களுக்கு உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க