• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி மேலாண்மை வாரியம்: 2 வாரகால அவகாசம் கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு

May 2, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மேலும் 2 வார அவகாசம் கேட்டிருந்தது. இது தொடர்பாக மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று இடைக்கால மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

காவிரி விவகாரத்தில் வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ள கால அவகாசம் நாளையோடு முடியவுள்ள நிலையில், தற்போது காவிரி விவகாரத்தில் மேலும் 2 வார கால அவகாசம் கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. வரைவு திட்டம் தொடர்பான மனுவோடு, மத்திய அரசின் இடைக்கால மனுவும் நாளை விசாரிக்கப்படும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.மத்திய அரசு இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுத்துள்ளது என்பதை அறிய நான்கு மாநில அரசுகளும் மிகுந்த எதிர்பார்ப்போடு உள்ளது.

மேலும் படிக்க