April 27, 2018
தண்டோரா குழு
கோவை ஃபிக்கி ஃப்ளோ அமைப்பின் 2018-2019 ஆம் ஆண்டின் புதிய தலைவராக ஜெயந்தி மனோகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஃபிக்கி ஃப்ளோ அமைப்பின் புதிய தலைவர் பதவியேற்பு விழா நேற்று (26.04.18) நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரம்மா குமாரிகள் சகோதரி கோதை பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
ஃபிக்கி ஃப்ளோ அமைப்பின் புதிய தலைவர் ஜெயந்தி மனோகர் கூறுகையில்,
“ஃப்ளோ கோயம்புத்தூர் அமைப்பு பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காக சமூகத்தில் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. இது தொழில்முனைவோர் ஒரு புதிய வியாபாரத்தை உருவாக்குவதற்கான மார்க்கெட்டிங் நுட்பங்களில் ஆலோசனை மற்றும் பயிற்சி அளிக்க ஸ்வயம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மற்றும் வழிகாட்டு பாகத்தை உருவாக்கியுள்ளது.
மேலும்,பிரதம மந்திரியின் தூய்மை இந்தியா திட்டத்தை ஆதரிக்கிறோம்.இத்திட்டத்தின் மூலம் ஒரு கிராமத்தை தத்தெடுத்துள்ளோம்.பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் கிராமப்புற பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் பெற அவர்கள் தங்கள் பொருட்களை விற்க இலவச விற்பனையகங்களை வழங்குகிறோம்.
ஃப்ளோ அமைப்பின் குறிக்கோள் பொருளாதரா வளர்ச்சி பாதையில் பெண்கள் தங்கள் திறமைகளை,திறன்களை,அனுபவங்கள் மற்றும் ஆற்றல்களை பொருளாதராத்தின் அனைத்து துறைகள் மற்றும் நிலைகளிலும் வெளிப்படுத்த ஊக்குவிக்கவும்,உதவி செய்வதும் ஆகும்”.என்று கூறினார்.