• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எஸ்.வி. சேகர் முன் ஜாமீன் கோரிய வழக்கு ஏப்.28க்கு ஒத்திவைப்பு – உயர்நீதிமன்றம்

April 25, 2018 தண்டோரா குழு

எஸ்.வி. சேகர் முன் ஜாமீன் கோரிய வழக்கில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை ஏப்.28 ஆம் தேதிக்குள் விளக்கம் தர உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகரும்,பாஜக உறுப்பினருமான எஸ்.வி சேகர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பத்திரிக்கையாளர் அவமதிக்கும் வகையில் தகாத கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.
இதுத்தொடர்பாக அனைத்து தரப்பிலும் இருந்து கண்டன குரல் எழுந்த உடனே தன்னுடைய முக நூல் பதிவு மற்றொருவருடையது என்றும்,தான் அதனை படிக்காமல் பகிர்ந்து விட்டேன் என்றும் அவர் விளக்கம் அளித்து மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில்,பத்திரிக்கையாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்.வி. சேகர் மீது காவல்துறையினர் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.இதனையடுத்து முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி. சேகர் தரப்பிலிருந்து மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மீதான விசாரணையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை ஏப்.28 ஆம் தேதிக்குள் விளக்கம் தர உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.மேலும் விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் எஸ்.வி.சேகருக்கு இதுவரை முன் ஜாமீன் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க