• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எஸ்.வி. சேகர் முன் ஜாமீன் கோரிய வழக்கு ஏப்.28க்கு ஒத்திவைப்பு – உயர்நீதிமன்றம்

April 25, 2018 தண்டோரா குழு

எஸ்.வி. சேகர் முன் ஜாமீன் கோரிய வழக்கில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை ஏப்.28 ஆம் தேதிக்குள் விளக்கம் தர உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகரும்,பாஜக உறுப்பினருமான எஸ்.வி சேகர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பத்திரிக்கையாளர் அவமதிக்கும் வகையில் தகாத கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.
இதுத்தொடர்பாக அனைத்து தரப்பிலும் இருந்து கண்டன குரல் எழுந்த உடனே தன்னுடைய முக நூல் பதிவு மற்றொருவருடையது என்றும்,தான் அதனை படிக்காமல் பகிர்ந்து விட்டேன் என்றும் அவர் விளக்கம் அளித்து மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில்,பத்திரிக்கையாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்.வி. சேகர் மீது காவல்துறையினர் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.இதனையடுத்து முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி. சேகர் தரப்பிலிருந்து மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மீதான விசாரணையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை ஏப்.28 ஆம் தேதிக்குள் விளக்கம் தர உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.மேலும் விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் எஸ்.வி.சேகருக்கு இதுவரை முன் ஜாமீன் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க