• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எஸ்.வி. சேகர் முன் ஜாமீன் கோரிய வழக்கு ஏப்.28க்கு ஒத்திவைப்பு – உயர்நீதிமன்றம்

April 25, 2018 தண்டோரா குழு

எஸ்.வி. சேகர் முன் ஜாமீன் கோரிய வழக்கில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை ஏப்.28 ஆம் தேதிக்குள் விளக்கம் தர உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகரும்,பாஜக உறுப்பினருமான எஸ்.வி சேகர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பத்திரிக்கையாளர் அவமதிக்கும் வகையில் தகாத கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.
இதுத்தொடர்பாக அனைத்து தரப்பிலும் இருந்து கண்டன குரல் எழுந்த உடனே தன்னுடைய முக நூல் பதிவு மற்றொருவருடையது என்றும்,தான் அதனை படிக்காமல் பகிர்ந்து விட்டேன் என்றும் அவர் விளக்கம் அளித்து மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில்,பத்திரிக்கையாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்.வி. சேகர் மீது காவல்துறையினர் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.இதனையடுத்து முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி. சேகர் தரப்பிலிருந்து மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மீதான விசாரணையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை ஏப்.28 ஆம் தேதிக்குள் விளக்கம் தர உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.மேலும் விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் எஸ்.வி.சேகருக்கு இதுவரை முன் ஜாமீன் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க