• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம்

April 23, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கோவை காந்திபுரத்தில் இன்று(ஏப் 23)மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், இதற்கு முயற்சி மேற்கொள்ளாத மத்திய – மாநில அரசுகளை கண்டித்தும் தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.இதேபோல்,கோவை காந்திபுரத்தில்,டாக்டர் நஞ்சாப்பா சாலையிலிருந்து துவங்கிய மனித சங்கிலி, லாலா கார்னர், கிராஸ்கட் சாலை,100 அடி சாலை, வடகோவை மேம்பாலம்,டாடாபாத் வரை ஏர் களப்பையுடன் திமுகவினர் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

திமுக மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ, மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி,புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் தமிழ்மணி, புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர்.இராமசந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத்தில் திமுக சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, காங்கிரஸ் கட்சி தலைவர் மயூரா ஜெயக்குமார்,காங்கிரஸ் புறநகர் மாவட்ட தலைவர் விஎம்சி.மனோகரன்,கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம்,ஆதி தமிழர் பேரவை நிறுவனர் அதியமான்,தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருஷ்ணன்,விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல தலைவர் சுசி.கலையரசன் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க