• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மேம்பால பணியின் போது தார் கொட்டியதால் வாகனங்கள் சேதம்

April 23, 2018 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்று வரும் இரண்டடுக்கு மேம்பாலப் பணியின் போது லாரியில் இருந்த தார் தவறி விழுந்து கீழ் சென்ற வாகனங்கள் மீது கொட்டியதால் வாகனங்கள் அனைத்தும் முற்றிலும் சேதமடைந்தது.

கோவையில் காந்திபுரம் பகுதியில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.முதலடுக்கு மேம்பால பணிகள் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் அடுக்கு மேம்பால பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.இந்த சூழலில் அந்த பணியின் போது, தார் சாலை அமைப்பதற்காக லாரி மூலமாக தாரை ஏற்றி வந்துள்ளனர்.அப்போது திடீரென லாரியில் இருந்த தார் பேரல் ஒன்று கீழே கொட்டியது.உடனடியாக தார் முழுவதும் கீழே சென்ற வாகனங்களின் மீது கொட்டியது இதன் காரணமாக அவ்வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் முற்றிலும் சேதமடைந்தது.

மேலும்,அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களின் மீதும் தார் கொட்டியதால் சில பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.இச்சம்பவம் நடைபெற்ற உடன் உடனடியாக லாரியின் ஓட்டுனர் தப்பி ஓடினார்.பின்னர் சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில்,வாகனங்களை பழுது செய்வதற்கான தொகையை அளிக்கப்படும் என உறுதியளித்தார்.இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க