• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மேம்பால பணியின் போது தார் கொட்டியதால் வாகனங்கள் சேதம்

April 23, 2018 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்று வரும் இரண்டடுக்கு மேம்பாலப் பணியின் போது லாரியில் இருந்த தார் தவறி விழுந்து கீழ் சென்ற வாகனங்கள் மீது கொட்டியதால் வாகனங்கள் அனைத்தும் முற்றிலும் சேதமடைந்தது.

கோவையில் காந்திபுரம் பகுதியில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.முதலடுக்கு மேம்பால பணிகள் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் அடுக்கு மேம்பால பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.இந்த சூழலில் அந்த பணியின் போது, தார் சாலை அமைப்பதற்காக லாரி மூலமாக தாரை ஏற்றி வந்துள்ளனர்.அப்போது திடீரென லாரியில் இருந்த தார் பேரல் ஒன்று கீழே கொட்டியது.உடனடியாக தார் முழுவதும் கீழே சென்ற வாகனங்களின் மீது கொட்டியது இதன் காரணமாக அவ்வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் முற்றிலும் சேதமடைந்தது.

மேலும்,அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களின் மீதும் தார் கொட்டியதால் சில பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.இச்சம்பவம் நடைபெற்ற உடன் உடனடியாக லாரியின் ஓட்டுனர் தப்பி ஓடினார்.பின்னர் சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில்,வாகனங்களை பழுது செய்வதற்கான தொகையை அளிக்கப்படும் என உறுதியளித்தார்.இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க