எச்.ராஜா விமர்சனம் தனக்கு மிகுந்த மனவேதனையை தருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி விஸ்வரூபம் எடுத்த நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று பத்திரிகையாளர்கள் சந்தித்தார். அப்போது,பெண் பத்திரிகையாளர் ஒருவரை ஆளுநர் பன்வாரிலால் கன்னத்தில் தட்டிய விவகாரம் தற்போது கடும் சர்ச்சையைக் கிளப்பியது.இதற்கு கனிமொழி, ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில்,தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிரூபர்கள் கேள்வி கேட்பார்களா?மாட்டார்களா?சிதம்பரம் உதயகுமார்,அண்ணாநகர் ரமேஷ்,பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா டிவிட்டரில் விமர்சனம் செய்திருந்தார்.இதற்கு திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து எச்.ராஜாவின் உருவபொம்மையை எரித்து வருகின்றனர்.இந்நிலையில்,எச்.ராஜா விமர்சனம் தனக்கு மிகுந்த மனவேதனையை தருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
“பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் எந்தக் கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது எனக்கு மிகுந்த மனவேதனையை தருகிறது”. எனக் கூறியுள்ளார்.
கோவை ஆனமலைஸ் டொயோட்டோவில் வாடிக்கையாளர்களுக்கு அர்பன் குரூஸர் ஹைரைடர் விழிப்புணர்வு அமர்வு
கோவை புரோசோன் மாலில் கிரிக்கெட் ரசிகர்களை சந்தித்த லைகா கோவை கிங்ஸ் அணியினர்
ரெனாட்டஸ் புரோக்கான் நிறுவனம் அதன் புது தயாரிப்பை அறிமுகம் செய்தது
1.36 கோடி மரங்கள் நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை -நடப்பாண்டில் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு
கிரசர், குவாரிகள் சங்கத்தின் சார்பில் 5000 மரக்கன்றுகள் நடவு
கோவை குமரகுரு கல்லூரி மாணவர்கள் உலகளாவிய சாதனை: மாற்று எரிசக்தி படகு, ரோபோடிக்ஸ் உருவாக்கம் – செய்தி பட