• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குற்றவாளிகள் யாரும் காப்பற்றப்பட மாட்டார்கள் – மோடி

April 13, 2018 தண்டோரா குழு

பாலியல் வன்கொடுமை தொடர்பாக குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது குற்றவாளிகள் யாரும் காப்பற்றப்பட மாட்டார்கள் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் 8 வயது சிறுமியை போலீசார் உட்பட 8 பேர் வன்கொடுமை செய்து கொலை செய்தனர்.அதைபோல் உ.பி.,மாநிலம் உனா பகுதியிலும் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டார்.இந்த சம்பவத்திற்கு நாடுமுழுவதும் கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. இவ்விரு சம்பவங்களையும் கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் நேற்று நள்ளிரவு டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் மெழுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினார். அவருடன் பிரியங்கா, ராபர்ட் வாத்ரா, மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில்,ராகுல்காந்தி பிரதமர் நரேந்திர மோடியிடம் டுவிட்டரில் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியிருந்தார்.சட்ட மேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, நாளை(ஏப்.,14) கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் தலைநகர் டில்லியில் அம்பேத்கர் நினைவிடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர்,

“நாகரிமான சமுதாயம் கொண்ட நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் வெட்கக்கேடானவை. நமது மகள்களுக்கு இழைக்கப்பட்ட சம்பவத்திற்கு நிச்சயம் நீதி கிடைக்கும். குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது. குற்றவாளிகள் யாரும் காப்பற்றப்பட மாட்டார்கள் என உறுதியளிக்கிறேன் எனக் கூறினார்”.

மேலும் படிக்க