• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை துடியலூர் அருகே அரசு விரைவு பேருந்து – டெம்போ நேருக்கு நேர் மோதி விபத்து

April 13, 2018

கோவை துடியலூர் அருகே அரசு விரைவு பேருந்தும், டெம்போவும் நேருக்கு நேர் மோதியதில் டெம்போ டிரைவர் பலியானார்,10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

கோவை துடியலூர் அருகிலுள்ள வெள்ளகிணர் பிரிவு பேருந்து நிறுத்தம் அருகே மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி அரசு விரைவு பேருந்து வந்து கொண்டு இருந்தது.அப்போது கோவையில் இருந்து வந்து கொண்டு இருந்த இரண்டு சக்கர வாகன ஓட்டி திடீரென வெள்ளகிணர் பிரிவு அருகில் வலது புரம் செல்லுவதற்காக திரும்பியுள்ளார்.இதனால் எதிரில் வந்த அரசு பேருந்தின் டிரைவர் இரண்டு சக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க அவரும் பேருந்து வந்த வேகத்தில் வலது புரம் திருப்பியுள்ளதாக தெரிகிறது.

அப்போது கோவையில் இருந்து துடியலூருக்கு சிமெண்ட் மண் ஏற்றி சென்று கொண்டு இருந்து டெம்போ மீது பேருந்து மோதியது. இந்த மோதலில் இரண்டு வாகனமும் பலத்த சேதமடைந்தது.

இதில் பலத்த காயம் அடைந்த டெம்போ டிரைவர் பாண்டித்துரையை 108 ஆம்புலன்ஸில் ஏற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் செல்லும் வழியிலேயே பாண்டித்துரை இறந்துவிட்டார்.

மேலும் படிக்க